பாண்டிச்சேரி: 3 சட்டக் கல்லூரி மாணவர்களின் தற்கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கல்லூரி மாடியின் மீது ஏறி நின்று கொண்டு கீழே குதித்துதற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் சுமார் 3 மணி நேரத்திற்கு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாண்டிச்சேரி சட்டக் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வருபவர் விஜயகாந்த். கல்லூரியில் தற்போது தேர்வுதொடங்கியுள்ளது.

இந்நிலையில் "அட்டெண்டன்ஸ்" குறைவாக இருந்ததால் விஜயகாந்த் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து விஜயகாந்த் மற்றும் அவரது இரு நண்பர்கள் கல்லூரியின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது ஏறிக்கொண்டனர்.

விஜயகாந்த்தை தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக மூவரும்மிரட்டினர்.

இதையடுத்து மற்ற மாணவர்களும் தேர்வு எழுதாமல் அங்கேயே குழுமி விட்டனர். கல்லூரி முதல்வர்,ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவர்களை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் தேர்வு எழுதஅனுமதித்தால்தான் வருவோம் என்று அவர்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்து மாணவர்களை கீழே இறங்கி வருமாறுகோரினர். ஆனால் அந்த மாணவர்களோ விடாப்பிடியாக அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்வு எழுத அனுமதிப்பதாக முதல்வர் கையெழுத்திட்டுக் கொடுத்த பின்னரே மூன்று பேரும் கீழேவந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக சுமார் 3 மணி நேரம் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+