கூட்டு அதிரடிப்படை அதிகாரிகள் மேட்டூரில் ரகசிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படை உயர் அதிகாரிகளின் ரகசியஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் நடந்தது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி மீண்டும் சூடு பிடித்துள்ளது. நாகப்பா சாவுக்குப் பிறகு இரு மாநிலஅதிரடிப்படைகளும் மீண்டும் காட்டுக்குள் புகுந்து தீவிர வீரப்பன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் மேட்டூரில் தமிழக, கர்நாடக அதிரடிப்படை உயர் அதிகாரிகளின் ரகசியக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார்3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் வீரப்பனைப் பிடிக்கத் தேவையான ஆயுதங்கள், அதிநவீன கருவிகள் குறித்தும்ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே வீரப்பன் தொடர்ந்து கர்நாடக காட்டுப் பகுதிக்குள்தான் இருப்பதாக இரு மாநில அதிரடிப் படைவீரர்களும் நம்புகிறார்கள். எனவே கர்நாடக காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வீரப்பன் தமிழக எல்லைக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக தமிழக காட்டு எல்லையில் ஏராளமானஅதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே வீரப்பன் நடமாட்டம் உள்ள மலைப் பகுதி கிராம மக்களும், பழங்குடி மக்களும் சரியான முறையில்துப்புக் கொடுத்தால் வீரப்பனை எளிதில் பிடித்து விடலாம் என்று கூடுதல் டி.ஜி.பியான வை. பாலச்சந்திரன்கூறினார்.

முன்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வீரப்பன் நடமாட்டம் தொடர்பாக இரு மாநில அதிரடிப்படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.தங்களுக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களையும் அவர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அதிரடிப்படைகள் உறுதி பூண்டுள்ளன என்றார்பாலச்சந்திரன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+