காவல் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
சேலம்:
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதியையொட்டி உள்ள காவல் நிலையங்களுக்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் கும்பல் கைவரிசை காட்டலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுமுகை, நீலகிரி, தர்மபுரி, சேலம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதி காவல் நிலையங்களில்கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட, இளம் போலீஸார் இங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை அவசரத்துக்கு அதிரடிப்படையினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் வீரப்பன் கும்பல் காவல் நிலையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி ஆயுதங்களைப் பறித்துப்போய் உள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.
மேலும் இப்போதுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையாவது வீரப்பன் உடனடியாகக் கடத்தி தமிழகஅரசுக்குத் தொல்லை தருவான் என உளவுப் பிரிவு எதிர்பார்க்கிறது.
காட்டுப் பகுதியில் வி.ஐ.பிக்கள் நடமாட்டம் ஏதும் இல்லாததால், காவல்துறை அல்லது வனத்துறையினரைவீரப்பன் கடத்த முயற்சிக்கலாம் என்று கருதப்படுகிறது.
மாதேஸ்வரன் மலை முற்றுகை:
இதற்கிடையே சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் பதுங்கியிருப்பதாக வந்ததகவலையடுத்து அங்கு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில்இறங்கியுள்ளனர்.
நாகப்பா படுகொலைக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இரு மாநில அதிரடிப்படையினரும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு மாநில அதிரடிப்படை போலீஸாரும் தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து வந்த சி.ஆர்.பி.எப். கொரில்லா படையும் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-->