விமான நிலையத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பு மதர்போர்டுகள், பிராஸஸர்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 24 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில், கூரியர் பார்சல் மூலம் பல லட்சம் பெறுமானள்ளகம்ப்யூட்டர் சாதனங்கள் கடத்தப்படுவதாக சென்னை வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்வந்தது.
இதையடுத்து வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி வீரையன் உத்தரவின் பேரில் போலீஸார், விமானநிலைய பார்சல்களை சோதனை போட்டனர்.
அப்போது டெல்லிக்கு அனுப்பப்படவிருந்த பார்சலைப் பிரித்தபோது அதில் 10 சந்தேகத்திற்கிடமான பெட்டிகள்இருந்தன. அதில் 4,500 கம்ப்யூட்டர் மதர்போர்டுகள், பென்டியம் 4 பிராஸஸர்கள் இருந்தன.
டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் இது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சாதனங்களின் மதிப்பு ரூ.24 லட்சம் என்று தெரிகிறது.
இது குறித்து விசாரித்தபோது டெல்லியில் அப்படிப்பட்ட நிறுவனமே இல்லை என்றும் தெரியவந்தது.
கூரியர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கும்பல் இந்த மோசடி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகக்கருதப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications