நீதித்துறையிலும் ஊழல் கண்காணிப்பு வேண்டும்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற அரசுத் துறைகளைப் போலவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நீதிபதிகள் நியமனங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே நடக்க வேண்டும். காரணம், நீதிபதிகளாகநியமிக்கப்படும் வக்கீல்கள், சில நேரங்களில் நீதித்துறையின் தேவையை பூர்த்தி செய்யம் வகையில்செயல்படுவதில்லை.
நீதித்துறையிலும் ஊழல் மலிந்து விட்டதாக முன்னாள் சுப்ம் கோர்ட் தலைமை நீதிபதி பரூச்சா கூறியுள்ளதை இந்தநேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.
எனவே நீதித்துறையையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வகையில்அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications