கள்ளப் படகுகளில் ராமேஸ்வரம் வந்த 4 பங்களாதேஷ் நபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 2 கள்ளப் படகுகளில் ராமேஸ்வரத்திற்கு வந்த பங்களாதேஷைச் சேர்ந்த 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
பங்களாதேஷைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம், முகம்மது சபீக், அப்துல் ஹக்கீம், ஷாஹித் உசைன் ஆகிய நான்கு பேரும் மாலத்தீவுகளுக்குச் செல்வதற்காக ஒரு ஏஜென்டிடம் பணம் கொடுத்துள்ளனர்.
அவரோ, அந்த நால்வரையும் இலங்கையில் கொண்டு வந்து விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அங்கிருந்த 2 கள்ளப் படகுகளில் ராமேஸ்வரத்திற்கு நான்கு பேரும் வந்தனர். அப்போது அவர்களை தமிழக போலீஸார் கைது செய்தனர்.
இவர்களுடன் வந்த மேலும் 2 பேரைக் காணவில்லை. அவர்களது படகு வழி மாறி வேறு ஊருக்குப் போயிருக்கலாம் என்று தெரிகிறது.
நான்கு பேரும் முறையான பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications