தலித் பெண்கள் சைக்கிள் ஓட்ட தடை: பெரம்பலூரில் கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட ஜாதியினர் வசிக்கும் தெருவில் தலித் பெண்கள் சைக்கிளில் வரக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கண்டித்து அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர் தடையை மீறிசைக்கிளில் செல்லும் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் பேரணைக் கிராமத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் தெருவில், தலித்மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சைக்கிளில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தலித்மக்கள் எதிர்த்தாலும் கூட அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலைதான் உள்ளது.

இந்நிலையில் தலித் பெண்களின் அவலத்தைப் போக்கும் வகையில் குறிப்பிட்ட அந்தத் தெருவில் தடையை மீறிசைக்கிளில் சென்று போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர்அறிவித்திருந்தனர்.

அந்த அமைப்பின் தலைவி சுபாஷினி தலைமையிலான குழுவினர் பேரணைக் கிராமத்திற்குள் நுழைந்தபோது,கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தெருவில் கால் எடுத்து வைக்கக் கூடாது என்றும், மீறினால்நடப்பதே வேறு என்று குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இருப்பினும் தடையை மீறி சைக்கிளில் செல்வோம் என்று கூறி விட்டு சுபாஷினி உள்ளிட்டோர் அந்தத் தெருவைஅடைந்தனர். ஆனாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, மகளிர் சங்கத்தினரைசைக்கிளில் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

தீண்டாமைக் கொடுமை எந்தளவுக்கு இன்னும் தலைவிரித்தாடுகிறது என்பதையே இந்தக் கொடும் செயல்காட்டுவதாக சுபாஷினி நிருபர்களிடம் தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+