For Daily Alerts
Just In
தூத்துக்குடி அனல் மின் நிலைய இயந்திரத்தில் சிக்கி ஊழியர் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், கன அழுத்தம் காரணமாக இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட ஒரு ஊழியர்பரிதாபமாக இறந்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த மாரியப்பன், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்துவந்தார்.
மாரியப்பன் நேற்று பணியில் இருந்தபோது கன அழுத்தம் காரணமாக அவர் நின்று கொண்டிருந்தஇயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டார்.
இதில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி மாரியப்பன் இறந்தார். மற்றொரு ஊழியரான பிரபு படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-->
Comments
Story first published: Sunday, December 15, 2002, 5:30 [IST]