பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதிகள் அறிவிப்பு
சென்னை:
பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 27ம்தேதியும் தொடங்கவுள்ளன.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் பழனிவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் டூ தேர்வுகள் 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தொடங்குகின்றன. அந்த மாதம் 25ம் தேதி வரை தேர்வுகள்நடைபெறும்.
காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள்மட்டும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்கும்.
அதே போல் மார்ச் 27ம் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். காலை10 மணி முதல் பகல் 12.30 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
மெட்ரிகுலேசன் தேர்வுகளும் மார்ச் 27ம் தேதியே தொடங்குகின்றன. ஏப்ரல் 10ம் தேதி வரை இந்தத் தேர்வுகள்நடைபெறுகின்றன. மெட்ரிகுலேசன் மாணவர்களும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரைதான்தேர்வுகளை எழுதவுள்ளனர்.
ஆங்கிலோ-இந்தியன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரைநடக்கின்றன என்று பழனிவேலு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-->