மோடிக்கு ஜெ. வாழ்த்து
சென்னை:
குஜராத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திரமோடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
தேர்தல் நடந்த 181 இடங்களில் 127 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரசுக்கு வெறும் 50 இடங்கள்மட்டுமே கிடைத்தன.
பா.ஜ.கவின் இந்தப் பிரம்மாண்டமான வெற்றிக்காக மோடிக்கு ஜெயலலிதா பாராட்டுக்களையும்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொலைபேசி மூலம் அவர் மோடியிடம் பேசுகையில்,
நீங்கள் மணிநகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்காகவும், குஜராத்தில் பா.ஜ.க. அதிகப் பெரும்பான்மைபெற்றுள்ளதற்காகவும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் கமிஷன் மற்றும் பத்திரிக்கைகள் ஆகியவற்றின் விரோதமான போக்குகளையும் மீறி நீங்கள் பெற்றுள்ளஇந்த வெற்றிக்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.
குஜராத் மக்களுக்கு உங்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என்று மோடியிடம் தொலைபேசியில் பேசினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அடிக்கடி தாக்கிப் பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளருமானஜெயலலிதா, பா.ஜ.கவை நோக்கி மீண்டும் நகர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications