பாண்டிச்சேரி: தற்கொலை மிரட்டல் விடுத்த 3 சட்ட மாணவர்கள் கைது
பாண்டிச்சேரி:
தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் கட்டடத்தின் மேலேயிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்றுமிரட்டிய புதுவை சட்டக் கல்லூரி மாணர்வர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாண்டிச்சேரி சட்டக் கல்லூரியில் 3வது ஆண்டு படித்து வருபவர் விஜயகாந்த். கடந்த 11ம் தேதி நடப்பதாகஇருந்த செமஸ்டர் தேர்வை எழுத இவர் அனுமதிக்கப்படவில்லை.
போதுமான வருகைப் பதிவு இல்லாத காரணத்தால் இவரை தேர்வு எழுத அனுமதிக்க கல்லூரி முதல்வர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த், அவரது நண்பர்கள் ஜெரால்ட் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்துகல்லூரிக் கட்டடத்தின் கூரை மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர்.
விஜயகாந்த்தை பரீட்சை எழுத அனுமதித்தால்தான் கீழே இறங்குவோம் என்றும் மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த் பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார் என்று கல்லூரி முதல்வர் உறுதிமொழிகொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் இறங்கி வந்தனர். இந்த பரபரப்பு காரணமாக அன்று நடக்கவிருந்தசெமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் மூன்று மாணவர்கள் மீதும் பாண்டிச்சேரி போலீஸில் கல்லூரி முதல்வர் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்கள் மீதும் தற்கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் மூன்று பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications