28 முறை சிறைவாசம்... 63 வழக்குகள்... தணியாத திருட்டுத் தாகம்!
திண்டுக்கல்:
28 முறை சிறை சென்றும், திருட்டுத் தாகம் தணியாத திண்டுக்கல் மாவட்டம் கெங்காபுரத்தைச் சேர்ந்த பலே திருடனை போலீஸார் கைது செய்தனர்.
கெங்காபுரத்தைச் சேர்ந்தவர் "பில்லா" என்ற ஞானசேகரன். திருட்டுகளில் பெரிய ஆள் என்பதால் "பில்லா" என்ற செல்லப் பெயர் இவருக்கு வந்ததாம்.
பல்வேறு திருட்டுக்கள் தொடர்பாக இதுவரை 28 முறை சிறை சென்று வந்துள்ளார் "பில்லா". இவர் மீது 63 திருட்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை.
இந்நிலையில் அணைப்பட்டி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போலீஸார் வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து "பில்லா"வை போலீசார் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications