ராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 4 தீர்த்தங்களை இடம் மாற்றும் பணிகைவிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில் பிரசித்தி பெற்ற சில தீர்த்தங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சர்வா, சிவா, சத்யாம்ருதா ஆகிய மூன்று தீர்த்தங்களும் இடமாற்றம்செய்யப்பட்டன. கோவில் பிரகாரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் இந்தஇடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் காயத்ரி, சாவித்ரி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய நான்கு தீர்த்தங்களையும் வேறு இடத்திற்கு மாற்றகோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் சிருங்கேரி மட சுவாமி ஆகியோரிடம் அனுமதிகோரப்பட்டிருந்தது.
ஆனால் இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்புதெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கூறி விட்டார்.
இதையடுத்து தீர்த்தங்களை இடமாற்றம் செய்வது கைவிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக ஆணையர் தேனய்யாகூறினார்.
-->