For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையோரம் கிடப்பதை எல்லாம் திருடும் கும்பல் கைது

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்:

சாலையோரத்தில் கிடக்கும் எந்தப் பொருளையும் விடாமல் திருடிச் செல்லும் 7 பேர் கொண்ட கும்பலைப்போலீசார் கைது செய்தனர்.

ரோடுகள் போடுவதற்காக சாலையோரத்தில் கருங்கல் ஜல்லிகளையும், தார் டின்களையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்திருப்பது சகஜம்.

அதேபோல் தண்டவாளம் போடுவதற்காக அதற்கான பெரிய பெரிய இரும்புகளையும், ஸ்லீப்பர் கட்டைகளையும்ரயில்வே துறையினர் சாலையோரத்தில் போட்டு வைத்திருப்பதும் உண்டு.

இப்படி சாலையில் அநாதையாகக் கிடக்கும் பொருட்களைத் திருடி விற்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

நாமக்கல் அருகே இன்று காலை சுமார் 202 டன் எடையுள்ள தண்டவாள இரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்றஒரு லாரியைப் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது தான் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து தெரியவந்தது.

இது தொடர்பாக ஏழு பேரைக் கைது செய்த போலீசார், அந்த லாரியையும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

சாலையில் கிடக்கும் எந்தப் பொருள்களையும் இந்தக் கும்பல் விட்டு விடுவதில்லையாம். அவற்றை லாரியில்அள்ளிப் போட்டுக் கொண்டு வேறு ஊரில் போய் விற்று விடுவார்களாம். அந்த லாரிக்கு "எஸ்கார்டு" போல அதன்பின்னாலேயே அந்தக் காரும் வருமாம்.

கைதான கும்பலிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X