குஜராத் தேர்தல் முடிவு: நாட்டு மக்களுக்கு அபாய எச்சரிக்கை- எஸ்.ஆர்.பி.
திருச்சி:
குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கவலை தருவதாக உள்ளது என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி, மதச்சார்பின்மை வாதிகளுக்கு கவலை தருவதாகஉள்ளது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மத வெறியைத் தூண்டி விட்டு வன்முறை மூலம் கிடைத்த வெற்றி இது. இந்த வெற்றியை ஜனநாயகத்திற்கும்,நாட்டுக்கும் விடப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.
இருப்பினும், மதச்சார்பின்மை கட்சிகள், சக்திகள் இனியாவது ஒருமித்த கருத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதை உணர வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை. சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாகபோட்டியிடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தகுதி வாய்ந்த வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்தத் தேர்தலில் திமுகவின் ஆதரவை நாங்கள் கோர மாட்டோம் என்றார் எஸ்.ஆர்.பி.
-->