சென்னை அருகே சர்ச்சில் காணிக்கைப் பணம் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே உள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் கிறிஸ்துமசையொட்டி ஏழைகளுக்குகொடுப்பதற்காக வசூலித்து வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
கொரட்டூர் பகுதியில் தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான சர்ச் உள்ளது. இந்த சர்ச்சில் கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் ஈஸ்டர் பண்டிகை சமயத்தில் காணிக்கைப் பணம் திருடப்பட்டது. அந்தத் திருட்டு தொடர்பாக யாரும்இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீடு வீடாகச் சென்று பாடல்கள் (கேரல்ஸ்) பாடி காணிக்கைப்பணம் வசூல் செய்யப்பட்டது.
ஏழைகளுக்குக் கொடுப்பதற்காக இந்த காணிக்கை பணம் வசூல் செய்யப்பட்டது. இந்தப் பணம் சர்ச்அலுவலகத்தில் உள்ள ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், நேற்று இரவு சில அடையாளம் தெரியாத நபர்கள் சர்ச்சிற்கு வந்தனர். சர்ச் காவலாளியைமிரட்டி அவர் இருந்த அறையில் வைத்துப் பூட்டினர்.
பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிக் காண்டுதப்பினர்.
இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை திருடியவர்களே இந்தமுறையும் திருடியிருக்கலாம் என்று சர்ச் நிர்வாகிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த முறையாவது திருடர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிப் பிடிக்க வேண்டும் என்று சர்ச் நிர்வாகிகள்கோரிக்கை விடுத்தனர்.
-->












Click it and Unblock the Notifications