பவானி ஆற்றில் கேரளா அணை கட்ட கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

"தினமலர்" பத்திரிகை தலைமை நிருபரான கோபால்ஜி இது தொடர்பாக பொது நலன் மனுவைத் தாக்கல்செய்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

பவானி ஆற்றின் குறுக்கே காலி கிராமத்தில் தடுப்பு அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் 5 லட்சம் ஏக்கர் பாசன நிலம்,குடிநீர் தேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இரு மாவட்டங்களும் வறண்டு போகும். சுமார் ஒரு கோடிமக்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேல் பவானி என்ற இடத்தில் இந்த ஆறு உற்பத்தியாகி 12 சிறு நதிகளோடு கலந்துசிறுவானி, பவானி, குண்டா என்ற பெயர்களில் கேரளாவுக்குள் பாய்கிறது.

அங்கு 30 கிலோமீட்டர் தொலைவிற்கு ஓடும் இந்த நதி பின்னர் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடப்பள்ளிஎன்ற இடத்தில் நுழைகிறது. அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு இந்த நதி பாய்கிறது. பின்னர் ஈரோடு மாவட்டம்வழியாகப் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

பவானி ஆற்றை நம்பி ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழில் நிறுவனங்களும் உள்ளன. இருமாவட்டங்களின் குடிநீர்த் தேவைகளும் பவானி ஆற்றை நம்பித்தான் உள்ளன.

இந்த அடிப்படை விஷயத்தை மறைத்து விட்டு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுதிட்டமிட்டுள்ளது. எனவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது மனுவில் கோபால்ஜி கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+