For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் நிலையத்தில் கிடந்த டெட்டோனேட்டர்கள்: நக்சல்களுக்காக வந்தவையா?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தின் மோட்டார் அறையில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தடெட்டோனேட்டர்களை போலீசார் கைப்பற்றினர்.

இவை நக்சலைட்டுகள் பயன்படுத்தும் ரகத்தைச் சேர்ந்த டெட்டோனேட்டர்கள் என்று தெரியவந்துள்ளது. வெடிகுண்டுகளைவெடிக்கச் செய்ய இவை பயன்படுத்தப்படும்.

இந்த ரயில் நிலையத்தை ஒட்டிய மாவட்டம் தர்மபுரி. இந்தப் பகுதியில் தான் சமீபத்தில் நக்சலைட்கள் வேட்டை நடந்தது. சுமார்25 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் மோட்டார் அறையில் சந்தேகத்துக்கிடமாகக் கிடந்த 3 பெட்டிகளைப்பார்த்த ஸ்டேசன் மாஸ்டர் போலீசாருக்குத் தகவல் தந்தார். அவர்கள் விரைந்து வந்து உடைத்து சோதனையிட்டபோது 300டெட்டோனேட்டர்கள் இருந்தன.

இதையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை யார் மோட்டார் அறையில் மறைத்து வைத்ததுஎன்ற விசாரணை நடந்து வருகிறது. நக்சலைட்டுகளின் கைகளுக்கு மாற்றி விடவே இவை கொண்டு வரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X