இலங்கை செல்லும் பெரம்பூர் ரயில் பெட்டிகள்
சென்னை:
சென்னை-பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையிலிருந்து ரயில் பெட்டிகளை வாங்க இலங்கை அரசுமுடிவு செய்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ரயில் போக்குவரத்து அமைச்சர் திலக் ஜனகா தலைமையிலான உயர் மட்டக் குழுஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு தொடர்பாகவே இந்தப் பயணம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இலங்கை குழுவினர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை அருகே பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கும் அவர்கள் சென்றனர். தொழிற்சாலைநிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாராகும் ரயில் பெட்டிகள் குறித்து சந்தோஷமும் திருப்தியும் தெரிவித்தனர்.இலங்கை ரயில்வேக்குத் தேவையான ரயில் பெட்டிகளை இங்கேயே வாங்கிக் கொள்ளவும் அவர்கள் ஆர்வம்தெரிவித்தனர்.
இதுதொடர்பான இறுதி முடிவு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் ஆலோசித்த பின் எடுக்கப்படும்என்றும் அவர்கள் கூறினர்.