கடன் தொல்லையால் கணவருடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை
சென்னை:
கடன் தொல்லை தாங்க முடியாமல் கொத்தனாரும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியும் விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர் தாம்பரம் அருகேஉள்ள சிட்லபாக்கத்தில் குடிசை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
அவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு வீட்டில் வறுமை தாண்டவமாடியது. செந்தில்குமாரின் சம்பளம் குடும்பம் நடத்தப்போதவில்லை.
இதனால் கணவனும், மனைவியும் கடன் வாங்கத் தொடங்கினர். கடன் சுமை ஏற, ஏற இருவராலும் அதை கட்டமுடியவில்லை. இந்த நிலையில் செல்வி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
எதையுமே சமாளிக்க முடியாமல் விரக்தியடைந்த செந்தில்குமார், தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து குளிர்பானத்தை வாங்கி அதில் விஷம் கலந்து இருவரும் அருந்தினர். சில நிமிடங்களிலேயேஇருவரும் சுருண்டு விழுந்து இறந்தனர்.
சிட்லபாக்கம் போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->