தமிழக, கர்நாடக அணைகட்டுகளில் நீர் வளக் கமிஷன் குழு
சேலம்:
கர்நாடகத்திலும் தமிழகத்திலும் உள்ள அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி நீரின் அளவு குறித்து ஆராய டெல்லியில்இருந்து மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் குழு வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று மேட்டூர் அணையைப் பார்வையிட்டனர். அணைக்கு வரும் நீரின் அளவு, அணையில் இருந்து திறந்து விடப்படும்நீரின் அளவு ஆகியவை குறித்து இக் குழு ஆராய்ந்தது.
மத்திய நீர் வளத்துறையின் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவினர் இன்று கர்நாடகத்தில் உள்ள பிலிகுண்டு அணைக்குச் சென்றனர். அங்கும் நீரின் அளவை ஆராய்ந்தனர். இந்தஅணையைத் தான் தமிழகத்துக்கு கர்நாடகத்தில் றுந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை அளக்க பயன்படுத்த வேண்டும் என கர்நாடகம்கோரி வருகிறது.
ஆனால், தமிழகத்துக்கு வரும் நீரை மேட்டூர் அணையில் தான் அளக்க வேண்டும் என தமிழக ரசு கோரி வருகிறது.
வரும் 22ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடக்கலாம் என்ற நிலையில் மத்திய நீர் வளக்கமிஷன் காவிரி நீர் அளவை ஆய்வு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனாலும், இது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான நீர் அளவிடும் பணி தான் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.
-->