அண்ணா பல்கலை. கேள்வித்தாள் "அவுட்": சிக்குகிறது நெல்லை கல்லூரி
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழகத்தின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும் சேர்ந்த பி.இ. மற்றும்பி.டெக் மாணவர்களுக்கான மெக்கானிக்ஸ் தேர்வுக்கான கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியானது. இதையடுத்து அந்ததேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
திருநெல்வேலி அருகே ஒரு கல்லூரியில் முதலில் லீக் ஆன இந்த கேள்வித் தாள்கள் தமிழகத்தின் பிற கல்லூரி மாணவர்களுக்குபேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மூத்த பேராசிரியர்தலைமையில் 3 அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் சமீபத்தில் தான் இணைக்கப்பட்டன.இதன் பிறகு நடக்கும் முதல் செமஸ்டர் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 227 பொறியியல் கல்லூரிகளிலும் முதல் செமஸ்டர தேர்வுகள் நடந்து வருகின்றன, நேற்றுகாலை மெக்கானிஸ் தேர்வு நடக்க இருந்தது. 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், கேள்வித்தாள்கள் நேற்றே அவுட் ஆகி விட்டதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்குதகவல்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழ பதிவாளர் கணபதி அறிவித்தார். மறு தேர்வுவிரைவில் நடைபெறும் என்றும் இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றை துணைவேந்தர் பாலகுருசாமி அமைத்துள்ளார் என்றும்கணபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நடந்த இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளிலும் கூட
கேள்வித்தாள் லீக் ஆனதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேக்ஸ் மூலம் பரவிய கேள்வித் தாள்:
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் தான் இந்தக்கேள்வித் தாள்கள் வெளியானதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் கேள்விக் தாள்களை மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு இந்தக் கல்லூரிமாணவர்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவை அடுத்தடுத்து பேக்ஸ் மூலம் மாநிலம் முழுவதுமே பரவியுள்ளன.
துணைவேந்தர் எச்சரிக்கை:
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இதுகுறித்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. எந்த ஊரிலிருந்து பேக்ஸ்கள் சென்றன. இதன் பின்னணியில்எந்தக் கல்லூரி உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். 3 நாட்களுக்குள் விசாரணைக் குழுவினர் தங்களதுஅறிக்கையைத் தாக்கல் செய்வர்.
அதன் பிறகு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும். எந்தக் கல்லூரியாவதுஇதன் பின்னணியில் இருந்தால் அந்தக் கல்லூரியின் அங்கீகாரமே நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் கேள்வித் தாள்கள்வெளியாகக் காரணமாக இருந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வரும் என்றார்.
நெல்லை கல்லூரி:
இதற்கிடையே, எந்தக் கல்லூரியிலிருந்து வினாத்தாள் வெளியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.நெல்லை அருகே உள்ள கல்லூரி தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் இக் கல்லூரி மீது நடவடிக்கைவரும்.
-->
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications