தமிழக ரயில் திட்டங்களுக்காக டெல்லியில் ஒன்று சேர்ந்த அனைத்துக் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தின் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும்,அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒற்றுமையாக செயலில் இறங்கியது இது தான் முதன்முறையாகும். காவிரிவிவகாரத்தில் கூட இவர்கள் ஒன்று சேர்ந்தது இல்லை.

ஆனால், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உண்மையாகவே கடுமையாகஉழைப்பதால் அவரது முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் ஒன்று சேர்ந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த திமுக, மதிமுக, பா.ம.க. மத்திய அமைச்சர்களும் இந்த எம்.பிக்களுடன் இணைந்து ரயில்வே அமைச்சர்நிதிஷ்குமாரைச் சந்தித்தனர். அவரிடம் இந்தக் குழுவினர் தந்த மனுவின் விவரம்:

கரூர்- சேலம் மற்றும் பெங்களூர்- சாந்தமங்கலம் இடையிலான ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்.

சிறப்பு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை- மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்யக் கூடாது. அந்த ரயிலைதொடர்ந்து இயக்க வேண்டும். அதே போல சென்னை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயிலையும் நிரந்தரமாக்கவேண்டும்.

திருச்சி- மதுரை, மதுரை- திருநெல்வேலி ஆகிய நகர்களுக்கு இடையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்க வேண்டும்.

கன்னியாகுமரி- ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை விரிவுபடுத்த வேண்டும். அந்த ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும்.

ஹைதராபாத்- சென்னை இடையிலான ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சியினரும்சேர்ந்து வந்து இந்த கோரிக்கையை வைத்ததால் அதை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிதிஷ்குமார்உறுதியளித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+