மதுரை தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்டத் திட்டம்
மதுரை:
மதுரை வண்டியூர் தெப்பகுளத்தில் முருகன் கோவில் கட்ட திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இந்த தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் தென் இந்தியாவில் 2,000 கோவில்கள் உள்ளன. ஜோதிடர்களைக்கொண்டு இந்த தேவஸ்தானம் சமீபத்தில் பிரஷ்ணம் (ஜோதிட நிபுணர்களின் தியான கலந்துரையாடல்) நடத்தியது. அப்போதுவண்டியூர் தெப்பக்குளத்தில் முருகப் பெருமானின் அருள் இருப்பதாகவும் அங்கு முருகன் கோவிலைக் கட்டுவது நல்லது எனவும்ஜோதிடர்கள் பரிந்துரைத்தனர்.
இது குறித்து தேவஸ்தானத்தின் உறுப்பினரான பேராசிரியர் சசிதரன் நிருபர்களிடம் கூறுகையில்,
முருகன் கோவிலுடன் சேர்த்து ஒரு ஓய்வு மண்டபமும் கட்டப்படும். அங்கு ஐயப்ப பக்தர்கள் தங்கிச் செல்ல வசதி செய்யப்படும்.மேலும் பிரஷ்ணம் நடத்தியபோது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் தொடங்க வேண்டும் எனவும் உத்தரவு வந்தது.இதையடுத்து இப்போது சபரிமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பம்பா நதிக்கு அருகே அரசு தந்த 100 ஹெக்டேர் நிலத்தை காடாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். சபரிமலையைச் சுற்றிலும்மரங்கள் ஏகப்பட்ட அளவில் வெட்டப்பட்டுவிட்டதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை ஈடு செய்ய காடுகள்வளர்க்க உள்ளோம்.
10 முதல் 60 வயதுள்ள பெண்கள் சபரி மலைக்கு வர முடியாது என்பதால் அச்சன்கோவிலில் ஒரு தங்க துவஜஸ்தந்பம்(கொடிமரம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து அச்சன்கோவிலுக்கு பெண் பக்தைகள் வந்து செல்ல முடியும்.
-->












Click it and Unblock the Notifications