For Daily Alerts
Just In
சசியுடன் டெல்லி சென்றார் ஜெயலலிதா
சென்னை:
இன்று நடக்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.
அவருடன் தோழி சசிகலாவும் உடன் சென்றார். இவர்களுக்கு முன்பே நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ், நிதித்துறை செயலர் நாராயணன் ஆகியோர் டெல்லி சென்று விட்டனர்.
தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்குமாறு மத்திய அரசை ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் வற்புறுத்துவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-->
Comments
Story first published: Saturday, December 21, 2002, 5:30 [IST]