For Daily Alerts
Just In
தீயில் கருகிய கற்பூர தொழிற்சாலை: ரூ. 40 லட்சம் நாசம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கற்பூரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர்படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது காரப்பேட்டை. இந்தப் பகுதியில் கற்பூரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது.
முதல் தளத்தில் பிடித்த தீ மளமளவென்று நிறுவனம் முழுவதிலும் பரவியது. இதில் அந்தக் கட்டடமும் அதில் இருந்தரூ. 40 லட்சம் மதிப்புள்ள கற்பூரமும் முழுவதும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்ககோணம் அகிய இடங்களிலிருந்து 7 தீயணைப்பு வண்டிகள்வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
-->
Comments
admk karunanidhi rajini jayalalitha mdmk vaiko film jail youths kerala producer kanchipuram ilangovan january
Story first published: Sunday, December 22, 2002, 5:30 [IST]