சசியுடன் ஜெ. ஹைதராபாத் பயணம்: ஒரு வாரம் ஓய்வெடுக்க திட்டம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள தனது பண்ணை வீட்டில் ஒரு வார காலம்ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தனது இந்தப் பயணத்தையொட்டி இன்று அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். தலைமைச்செயலகத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் தம்பித்துரையின் மனைவி நடத்தும் பொறியியல் கல்லூரி நிலத்தை சுட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கில் மாட்டிக் கொண்டது, பஸ்கள் தனியார்மயமாக்கல், வறட்சி நிவாரணப் பணிகள்,சாத்தான்குளம் இடைத் தேர்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளன.அடுத்த ஒரு வார காலமும் தான் சென்னையில் இல்லாதபோது நிறைவேற்ற வேண்டிய விஷயங்கள் குறித்துஅமைச்சர்களுக்கு அவர் உத்தரவுகளை இடுவார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாள்:
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரின் 15-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிசென்னையில் நாளை ஜெயலலிதா தலைமையில் அமைதிப் பேரணி நடக்கிறது.
அண்ணா சாலை அண்ணா சிலையிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் முடிவடைகிறது.
நாளை மாலையே ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவர் ஒரு வாரம் வரைதங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் செல்கிறார்.
-->












Click it and Unblock the Notifications