மக்கள் தமிழ் தேசம் மிக வேகமாக வளர்கிறதாம்: கண்ணப்பன் சொல்கிறார்
சிவகங்கை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதா அல்லது வேறு எந்தக்கட்சிக்காவது ஆதரவு தருவதா என்பது குறித்து ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள தொண்டர் கூட்டத்தில்ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் பல்வேறு குக்கிராமங்களிலும் கூடஎங்களது கட்சியின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தொண்டர்களிடையே பெரும் ஆர்வம், எழுச்சியும் காணப்படுகிறது என்றார் அவர்.
இவரை அதிமுகவில் இணைப்பதாக அக் கட்சியின் தலைவி ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து கட்சியைக்கலைத்தார் கண்ணப்பன். ஆனால், கட்சிக் கலைப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்னர் இவரை அதிமுகவில்சேர்ப்பதில்லை என்று ஜெயலலிதா முடிவெடுத்தார்.
நன்றாக ஏமாந்த கண்ணப்பன் மீண்டும் கட்சியை நடத்தி வருகிறார்.