தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரிப்பு: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
சென்னை:
தமிழகத்தில் இஸ்லாமிய மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிர்ச்சியூட்டும் வகையில்அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் சுமார் 18 இஸ்லாமிய தீவிரவாதிகளும், 25 நக்சலைட்டுகளும், 15க்கும்மேற்பட்ட தமிழ்த் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர். போலீசாரின் செயல்பாடின்மையும் உளவுப் பிரிவினரும் தோல்வியும்தான் தமிழகத்தில் தீவிரவாதிகள் இந்த அளவுக்கு செயல்பட ஆரம்பித்திருப்பதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
பிடிபட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவே ஆகும். பிற மாநிலங்களில் போலீசாரின்கண்காணிப்பு அதிகரித்துவிட்டதால் தமிழகம் தான் தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறிவருகிறது.
இந் நிலையில் இன்று நிருபர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தீவிரவாதிகளின் நடமாட்டம் கவலைதருவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்கிவிட்டது. இதை போலீஸ்அதிகாரிகள் அளிக்கும் பேட்டிகளும் அறிக்கைகளுமே உறுதி செய்கின்றன. தினசரி தீவிரவாதிகள் பிடிபடுவதாகசெய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதால் தான் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இது மிகவும்கவலை தருவதாக உள்ளது. பொதுமக்கள் கோவிலுக்கும் பொது இடங்களுக்கும் கூட பயமின்றி செல்ல முடியாதஅவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மக்கள் பீதியுடன் தான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் மதவாதத்துக்கு வெற்றி கிடைத்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க. இந்துத்துவாகொள்கைகளை தேசிய அளவில் கடை பிடித்தால் கூட்டணியைவிட்டு விலகுவோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவது அதிகரித்துவருகிறது. இதற்கான காரணத்தை ஆட்சியாளர்கள்தான் கூற வேண்டும் என்றார் கருணாநிதி.
-->