For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றவாளிகளைக் கண்காணிக்க லாட்ஜுகளில் ரகசிய கேமராக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குற்றச் செயல்களைத் தடுக்கவும், லாட்ஜுகளுக்கு வருவோரைக் கண்காணிக்கவும், சென்னை நகரில் உள்ளலாட்ஜுகளில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து சென்னை நகருக்கு வரும் பல குற்றவாளிகள் தங்களது குற்றச் செயல்களைலாட்ஜூகளில்தான் நிறைவேற்றுகிறார்கள். வெளியூரிலிருந்து கூட்டி வந்து கற்பழித்து, கொலை செய்து விட்டுதப்புவது, தற்கொலை செய்து கொள்வது ஆகிய குற்றங்கள் லாட்ஜூகளில் அதிகரித்தவண்ணம் இருப்பதால்இவற்றைத் தடுப்பது தொடர்பாக சில நிடவடிக்கைகளை சென்னை நகர காவல்துறை வகுத்துள்ளது.

இதுதொடர்பாக இணை ஆணையர் சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை அதிகாரிகள், லாட்ஜ்உரிமையாளர்கள் கூட்டம் நிடந்தது இதில் பாரினை பகுதியைச் சேர்ந்த ஏராளமான லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது சில முக்கிய டிவுகளை லாட்ஜ் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றுசைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.

  • லாட்ஜுகளின் வரவேற்பறையில் ரகசிய கேமராக்கள் வைத்து வருவோர், போவோரைக் கண்காணிக்க வேண்டும். லாட்ூக்கு வருவோரின் தங்கள் கேமராவில் பதிந்து விடுவதால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காண டியும் என்பதால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  • ஒரே அறையில் பல பேர் தங்கினால், அவர்கள் குறித்து விசாரித்து அருகில் உள்ள காவல் நலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.
  • லாட்ஜூகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் குறித்த விவரத்தை புகைப்படங்களுடன் காவல் நலையத்தில் கொடுக்க வேண்டும்.
  • லாட்ஜில் தங்குவோரின் முழு கவரியும் பெறப்பட வேண்டும். அவர்கள் கொண்டு வரும் சூட்கேஸ் போன்றவற்றை திறந்து காட்டி சோதனை செய்ய வேண்டும்.
என்ற முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இவற்றை உடனடியாக கடைப்பிடிக்க ஆரம்பிக்குமாறு லாட்ஜ்உரிமையாளர்களுக்கு சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X