For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 4 தமிழ் தீவிரவாதிகள் கைது

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பெசன்ட் நகர் ஸ்டேட் வங்கியின் கேசியர் விஸ்வநாதனைக் கொன்றுவிட்டு பணத்தைக்கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பெசன்ட் நகர் 16வது கிராசில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் காலையில் இந்த சம்பவம்நடந்தது.

கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற கேசியர் விஸ்வநாதனை கொள்ளையர்கள் கத்தியால் குத்திக் கொன்றனர்.பின்னர் வங்கியின் லாக்கர் அறைக்குள் நுழைந்து பணத்தைத் திருட முயன்றபோது எச்சரிக்கை மணி ஒலித்தது.இதையடுத்து கொள்ளை முயற்சியைக் கைவிட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வடபழனியில் சிலநாட்களுக்கு முன் தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராம் கைது செய்யப்பட்டார்.

அவருக்கும் இந்தக்கொள்ளை முயற்சியில் தொடர்புண்டு. இவரிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளையில்தொடர்புடைய பிறரது விவரங்களைக் கொடுத்தார்.

இதையடுத்து தாம்பரத்தில் பதுங்கியிருந்த மணிவண்ணன், ரவிச்சந்திரன், வேலு, வேலு பிரபாகரன் ஆகியநால்வரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேர் தப்பியோடிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த நான்கு பேரும் தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள். தங்களது அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

-->Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X