இலங்கை சிறைகளில் வாடிய 44 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
நாகப்பட்டனம்:
இலங்கையிலிருந்து விடுதலையாகி ராமேஸ்வரம் வழியாக நாகப்பட்டினம் வந்து சேர்ந்த 44 மீனவர்களுக்கும்உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நாகப்பட்டனம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 62 மீனவர்கள் கடந்த அக்டோபர் 28ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். பிடிபட்ட தமிழக மீனவர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்தன. இதன் பயனாக இலங்கைசிறையில் அடைக்கப்பட்டிருந்த 44 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து தங்கள் ஊருக்குப்புறப்பட்டனர்.
நேற்று இரவு நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்த மீனவர்களை உறவினர்களும், அதிகாரிகளும்வரவேற்றனர். இலங்கை கடல் எல்லைக்குள் செல்லாமல் மீன் பிடிக்குமாறு அவர்களுக்கு கலெக்டர் சுதீப் ஜெயின்அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இலங்கை சிறையில் இன்னும் 18 தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், அவர்களையும் மீட்க துரிதநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கூறினர்.
-->