சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தன் தோழி சசிகலாவுடன் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் ஹைதராபாத் கிளம்பிய ஜெயலலிதா, அங்குள்ள தன்னுடைய பண்ணைவீட்டில் சுமார் ஒரு வார காலத்திற்குத் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
சசிகலா தவிர ஜெயலலிதாவின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் அவர்களுடன் ஹைதராபாத்திற்குச் சென்றார்.
இந்த ஒரு வார காலமும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஹைதராபாத்தில் இருந்தவாறே தன்செயலாளர் மூலம் அமைச்சர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் டி.ஜி.பி.நெய்ல்வால் உள்ளிட்டவர்கள் முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.
-->












Click it and Unblock the Notifications