வீரப்பனின் கூட்டாளி மாதையன் கைது
சேலம்:
வீரப்பனின் கூட்டாளியான மாதையன் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வீரப்பனின் அண்ணன் பெயரும் மாதையன் தான். அதே போல சேத்துக்குளியானின் சகோதரன் பெயரும் மாதையன் தான்.இப்போது பிடிபட்டவன் இன்னொரு மாதையன்.
கடந்த 1996ம் ஆண்டு அரேபாளையா என்ற இடத்தில் வீரப்பன் கும்பலுக்கும், தமிழக அதிரடிப்படைபோலீஸாருக்கும் இடையே நேரடி மோதல் நடந்தது. இதில் எஸ்.பி. தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட சிலர்காயமடைந்தனர். காவலர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இந்த மாதையனும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை தற்போதுஅதிரடிப்படை போலீஸார் ஆத்தூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
மாதையனிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, சில தோட்டாக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் அவர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க கோர்ட்உத்தரவிட்டது. இவன் கர்நாடக மாநிலம் சிக்கஹள்ளியைச் சேர்ந்த இந்த மாதையனுக்கு வயது 44. இவனிடம்விசாரணை நடந்து வருகிறது.
-->












Click it and Unblock the Notifications