பவானி ஆற்றில் அணை கட்டக் கூடாது: கேரள அரசுக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை:
பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் அந்தோணிக்குதமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரளாவில் பாய்ந்து, பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் வரும்நதி பவானி.
இந்த ஆற்றின் குறுக்கே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலி என்ற இடத்தில் அணையைக் கட்டகேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வருக்கு ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில்,
பவானி ஆற்றில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பவானி ஆற்று நீர் வருவது தடுக்கப்படும்.
மேலும் இந்த அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் 3 லட்சம்ஹெக்டேர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதிவருகின்றனர்.
எனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டம் முயற்சியை கேரள அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் காவிரி ஆணையத்தின் அனுமதி பெறாமாலும் அணையைக் கட்டக் கூடாது. காவிரி நடுவர் நீதிமன்றத்தின்இறுதித் தீர்ப்பு கூட இன்னும் வழங்கப்படவில்லை.
அதற்குள் சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழகத்தின் அனுமதியைக் கூட கேட்காமல் பவானியில் அணை கட்டமுயல்வது தவறு என்று அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் நிலை படுமோசமாகிவிடும் என்பதால் அணை கட்டும்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால்ஜி என்பவர் ஏற்கனவே வழக்குதொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு தொடர்பாக மத்திய, தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications