பவானி ஆற்றில் அணை கட்டக் கூடாது: கேரள அரசுக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை:
பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் அந்தோணிக்குதமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரளாவில் பாய்ந்து, பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் வரும்நதி பவானி.
இந்த ஆற்றின் குறுக்கே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலி என்ற இடத்தில் அணையைக் கட்டகேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வருக்கு ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில்,
பவானி ஆற்றில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பவானி ஆற்று நீர் வருவது தடுக்கப்படும்.
மேலும் இந்த அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் 3 லட்சம்ஹெக்டேர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதிவருகின்றனர்.
எனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டம் முயற்சியை கேரள அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் காவிரி ஆணையத்தின் அனுமதி பெறாமாலும் அணையைக் கட்டக் கூடாது. காவிரி நடுவர் நீதிமன்றத்தின்இறுதித் தீர்ப்பு கூட இன்னும் வழங்கப்படவில்லை.
அதற்குள் சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழகத்தின் அனுமதியைக் கூட கேட்காமல் பவானியில் அணை கட்டமுயல்வது தவறு என்று அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் நிலை படுமோசமாகிவிடும் என்பதால் அணை கட்டும்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால்ஜி என்பவர் ஏற்கனவே வழக்குதொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு தொடர்பாக மத்திய, தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications