தமிழகத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமான உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டது.
இயேசு நாதர் அவதரித்த நாளான கிருஸ்துமஸ் பண்டிகை, உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும் இந்தப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் உள்ள பரங்கிமலை பேராலயம், மயிலாப்பூர் லஸ் சர்ச், சாந்தோம் சர்ச், எழும்பூர் பேரலாயம்உள்ளிட்ட முக்கிய சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.
அதேபோல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சர்ச்சுகளில் கிருஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக்கொண்டாடப்படுகிறது. சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிருஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் கூட இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிருஸ்தவர்கள்தங்கள் வீடுகளில் கிருஸ்துமஸ் மரம், மெழுகுவர்த்திகளை ஏற்றியிருந்தனர்.
தங்கள் வீடுகளுக்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கேக், ஸ்வீட்டுகளைக் கொடுத்து கிருஸ்தவர்கள்மகிழ்ந்தனர்.
-->