வாஜ்பாய்க்கு 1.5 கி.மீ. நீஈஈஈள பிறந்தநாள் வாழ்த்து கடிதம்: கோவையில் ஒரு சாதனை
கோயம்புத்தூர்:
பிரதமர் வாஜ்பாய்க்கு 1.5 கி.மீ. நீள பிறந்தநாள் வாழ்த்து கடிதம் தயாரித்து கோயம்புத்தூர் வடக்கு மாவட்டதொழில் மற்றும் வர்த்தகப் பிரிவு சாதனை படைத்துள்ளது.
இந்த நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான வாழ்த்துக் கடிதம், 500 கி.மீ. நீளம் கொண்ட மூன்று துணிகள் மூலம்இணைக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் இந்தக் கடிதத்தில் 13,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்உள்பட 25,000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த 19ம் தேதியே இதற்கான கையெழுத்து வேட்டை ஆரம்பமாகிவிட்டது.
பிரதமரின் பிறந்தநாளான இன்று காலை கோயம்புத்தூர் தொகுதி எம்.பியான ராதாகிருஷ்ணன் தன்னுடையகையெழுத்தைப் போட்டு வாழ்த்துக் கடிதத்தை நிறைவு செய்தார்.
இந்த வாழ்த்துக் கடிதம் விரைவில் வாஜ்பாய்க்கு அனுப்பப்படவுள்ளது. முடிந்தால் நேரடியாக அவரைச் சந்தித்தேஇதைக் கொடுக்கலாம் என்றும் தெரிகிறது.
சுமார் 6 அங்குல அகலமும் கொண்ட இந்த வாழ்த்துக் கடிதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 750 மீட்டர் நீளமுள்ளவாழ்த்துக் கடிதம்தான் கின்னஸ் சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->