மோடி ஸ்டைல் அரசியல் வேண்டாம்: ஜெ.வுக்கு இளங்கோவன் எச்சரிக்கை
சென்னை:
நரேந்திர மோடி ஸ்டைலில் அரசியல் நடத்த நினைக்கும் ஜெயலலிதாவின் திட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காதுஎன்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சோனியாகாந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் குழந்தைகளுக்கு இலவச உடை வழங்கும்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளங்கோவன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்துத்துவா கொள்கையை வலியுறுத்துவதன் மூலமும், பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து செயல்படுவதன்மூலமும் அடுத்த தேர்தலிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். ஆனால்அவரது அரசியல் ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது.
குஜராத்தில் நரேந்திர மோடி செய்தது போல தமிழகத்திலும் மத வெறியைத் தூண்டி விட்டு, இந்துத்துவாகொள்கையை கட்டவிழ்த்து விட ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் அது நடக்காது. மீறி நடத்த முயற்சித்தாலும்அவர் வீழ்ச்சியைத்தான் சந்திப்பார்.
தமிழக மக்களிடையே மத நல்லிணக்கத்தை குலைத்து, அவர்களை மத ரீதியாக பிளவுபடுத்த ஜெயலலிதா முயற்சிசெய்கிறார். அதில் அவர் வெற்றி பெறப் போவதில்லை.
கருணாநிதியை வாசன் சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை. முரசொலி மாறன் உடல் நலம் குறித்துவிசாரிக்கத்தான் கருணாநிதியின் வீட்டுக்குப் போனதாக வாசனே கூறியுள்ளார்.
மதவாத பா.ஜ.க.வுடன் திமுக உறவை முறித்துக் கொள்ளாத வரையில் அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசமுடியாது.முதலில் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியே வரட்டும். பிறகு நடக்க வேண்டியது நடக்கும்.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தெளிவாகக்கூறியுள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று சக்தியாக வேகமாக உருவெடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி என்றார்இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications