நாகப்பா டைரியில் தோண்டத் தோண்ட தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் பல அரசியல்வாதிகளுக்கும், கிரானைட் அதிபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா தன் டைரியில் சங்கேத மொழியில் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுக்குள் நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்கு அருகிலேயே அவருடையடைரியும் கிடைத்தது.

அந்த டைரியில் தன் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதியுள்ள நாகப்பா, "ரூ.40 கோடி, வயர்லெஸ் செட்" போன்றசில வார்த்தைகளையும் எழுதியிருந்தார்.

இதுபோன்ற பல சங்கேத வார்த்தைகளையும் தன் டைரியில் ஆங்காங்கே எழுதியுள்ளார் நாகப்பா. அது குறித்தவிவரங்களைப் போலீசார் படிப்படியாக ஆராய்ந்து வருகின்றனர்.

டாக்டர்... ராம்குமார்... வீரமணி... கோயம்புத்தூரைச் சேர்ந்த கரிகல்லு செட்டி... 27 லட்சம் ரூபாய்... 17 லாரி... 7லாரி... கிரானைட்... சந்தன லாரி என்று பல வார்த்தைகள் அரைகுறையாகவே எழுதப்பட்டிருந்தன.

வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் பேசிய விவரங்களைத்தான் நாகப்பா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிரானைட் குவாரி அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் வீரப்பனுக்கு இன்னும் கப்பம் கட்டி வருவதாகவும்தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையே கர்நாடக அமைச்சர் ராஜு கவுடாவின் நெருங்கிய நண்பரான பசவராஜ் என்பவர் காட்டுக்குள்சென்று வீரப்பனைச் சந்தித்துப் பேசிய விவரம் தெரிய வந்துள்ளது.

வீரப்பனுடன் ராஜு கவுடாவுக்குத் தொடர்பு உள்ளதால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும்கர்நாடக முதல்வரும் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அம்மாநில சட்டசபையில் பா.ஜ.கவினர்நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரப்பனுடன் பசவராஜ் என்ன பேசினார் என்பது குறித்து விசாரித்து தெரியப்படுத்த வேண்டும் என்றுநாகப்பாவின் குடும்பத்தினர் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+