For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகப்பா மரணம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. கலாட்டா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நாகப்பாவின் மர்மமான மரண விவகாரம் இன்றும் கர்நாடக சட்டசபையின் வெளியிலும் உள்ளேயும் வெடித்தது.

இந்த மரணத்தில் கர்நாடக அரசு உண்மைகளை மறைப்பதாகவும், மரணத்துக்கே முதல்வர் கிருஷ்ணா தான் காரணம் எனவும்பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது.

சட்டசபையை நடத்த விடாமல் பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் போட்டதால் அவர்கள் அனைவரையும் இந்தசட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் வெங்கட்டா அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னரும் அவர்கள் அவையை விட்டு வெளியேறாததால் காவலர்களை வைத்து அவர்களை சபாநாயகர்வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட பா.ஜ.கவினர் அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடியேசென்றனர்.

மேலவையில் ஏற்கனவே பா.ஜ.க. எம்.எல்.சிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர்.

இந் நிலையில் இன்று ஆயிரக்கணக்கான பா.ஜ.க, தொண்டர்கள் கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான செளதாவைமுற்றுகையிட முயன்றனர். ஆனால், இதை முறியடிக்க விதான செளதாவைச் சுற்று 144 வது பிரிவு போலீஸ் தடையுத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

இதனால் விதான செளதாவில் இருந்து 5 கி.மீ. தூரத்திலேயே பா.ஜ.க. தொண்டர்கள் தடுக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் அங்கிருந்தவண்ணம் அரசை எதிர்த்து கோஷமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X