வைகோ விடுதலை கோரி இளங்கோவன் கையெழுத்து
சென்னை:
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மூத்த காங்கிரஸ்தலைவர் குமரி அனந்தன் ஆகியோரும் கையெழுத்துப் போட்டுள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலை விஷயத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்து வரும் காங்கிரஸ் இதில் கையெழுத்திட்டிருப்பதை அதிமுகவும்காங்கிரசில் உள்ள சில தலைவர்களும் விமர்சித்துள்ளனர். ஆனாலும் தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என இளங்கோவன்கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், பொடா சட்டத்தில் வைகோவைக் கைது செய்தது தவறு என்று நான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். சோ.பாலகிருஷ்ணனும் இதில் கையெழுத்துப் போட்டுள்ளார். கைதாகி 160 நாட்களுக்கு மேலாகியும் அவர் மீதுஇன்னும் குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி விசாரணையே இல்லாமல் ஒரு தலைவரை சிறையில் அடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதனால் தான் கையெழுத்துப் போட்டோம். வைகோ ஏன் கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் வேறு விஷயம். அந்தப்பிரச்சனைக்கு போக நான் விரும்பவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சில மனநோயாளிகளும் இருக்கின்றனர் (அதிமுகவை ஆதரிக்கும் தங்கபாலு போன்றவர்களைத்தான் இவர் குறிப்பிடுகிறார்).யார் தோளிலாவது ஏறி பதவிக்குப் போவது தான் அவர்களது ஒரே கொள்கை. மக்கள் எழுச்சிபெரும்போது இந்த பதவி வெறியர்கள் திருஷ்டி பூசணிக்காய் போல வெடித்துச் சிதறுவார்கள் என்றார் இளங்கோவன்.
-->












Click it and Unblock the Notifications