பாவாணன் வீட்டில் போலீசார் மீண்டும் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் மன்ற அமைப்பாளரான பாவாணன்வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் "க்யூ" பிரிவு போலீசார் 3வது முறையாக சோதனை நடத்தினர்.
மதிமுகவின் மேடைப் பேச்சாளராகவும் இருந்த பாவாணன், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில்விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவருடைய வீடு மற்றும் தொழிற்சாலைகளில் "க்யூ" பிரிவுபோலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாவாணன் வீட்டிலும் தொழிற்சாலைகளிலும் "க்யூ" பிரிவுப் போலீசார் திடீரென்றுவந்து சோதனை செய்தனர்.
நேற்று மாலை வரை சோதனை நடைபெற்றது. ஆனால் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்துதெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications