For Daily Alerts
Just In
புத்தாண்டு: வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம்
சென்னை:
2003ம் ஆண்டு பிறப்பதையொட்டி வரும் 1ம் தேதி சென்னை வடபழனிஆண்டவர் கோவிலில் சிறப்புபூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக மூன்று வரிசைகளாக நின்று பக்தர்கள் முருகனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் இரண்டு வரிசைகள் இலவச தரிசனத்திற்காகவும், ரூ.10 கொடுத்து சிறப்புத் தரிசனம் செய்யவிரும்புவோருக்காக ஒரு வரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ரூ.100 கொடுத்து டிக்கெட் பெற்றால் இரண்டு பேர் சேர்ந்து சிறப்பு தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு 3கிராம் எடையுள்ள முருகன் படம் பொறித்த டாலர் பிரசாதமாக தரப்படும்.
கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
Comments
Story first published: Thursday, December 26, 2002, 5:30 [IST]