தாமரைக்கனியை தாக்கிய வழக்கு: நாகை நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
வேலூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் கடந்த 1984ல் தாக்கப்பட்ட வழக்குதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 1984 மே 19ம் தேதி மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் தாமரைக்கனி உள்ளிட்ட சிலஅதிமுகவினர் வேனில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வைகோ, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி உள்பட சில திமுகவினர் சேர்ந்து கொண்டுதாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினரைத் தாக்கியதாகப் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக வைகோ, கோ.சி. மணி, இடும்பையன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இரண்டு பேர் இறந்து விட்டனர்.வைகோ, கோ.சி. மணி மற்றும் இடும்பையன் ஆகியோர் மீது மட்டும் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
இவ்வழக்கில் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு போதுமான காரணங்கள் இல்லை.
மேலும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் சட்டம் காலாவதியாகி விட்டதால் வழக்கை மேற்கொண்டுநடத்த வேண்டிய அவசியமில்லை என்று அம்மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இம்மனுவை சமீபத்தில் விசாரித்த நாகப்பட்டினம் நீதிமன்றம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கக் காலஅவகாசம் தரும் வகையில் இன்றைக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜராவதற்காக வேலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்த வைகோ பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் அழைத்துச் செல்லப்பட்டார்.
நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பின்னர் இவ்வழக்கைவரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications