For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமரைக்கனியை தாக்கிய வழக்கு: நாகை நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் கடந்த 1984ல் தாக்கப்பட்ட வழக்குதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 1984 மே 19ம் தேதி மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் தாமரைக்கனி உள்ளிட்ட சிலஅதிமுகவினர் வேனில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வைகோ, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி உள்பட சில திமுகவினர் சேர்ந்து கொண்டுதாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினரைத் தாக்கியதாகப் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக வைகோ, கோ.சி. மணி, இடும்பையன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இரண்டு பேர் இறந்து விட்டனர்.வைகோ, கோ.சி. மணி மற்றும் இடும்பையன் ஆகியோர் மீது மட்டும் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

இவ்வழக்கில் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு போதுமான காரணங்கள் இல்லை.

மேலும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் சட்டம் காலாவதியாகி விட்டதால் வழக்கை மேற்கொண்டுநடத்த வேண்டிய அவசியமில்லை என்று அம்மனுவில் வைகோ கூறியிருந்தார்.

இம்மனுவை சமீபத்தில் விசாரித்த நாகப்பட்டினம் நீதிமன்றம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கக் காலஅவகாசம் தரும் வகையில் இன்றைக்கு ஒத்திவைத்தது.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜராவதற்காக வேலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்த வைகோ பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் அழைத்துச் செல்லப்பட்டார்.

நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பின்னர் இவ்வழக்கைவரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X