For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் நான் பயப்பட மாட்டேன்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவுக்கு எதிராக யார், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் நான் பயப்படப் போவதில்லை. யாருக்கும் நான்பயப்படவும் மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சாத்தான்குளம் இடைத் தேர்தலை வைத்து எதிர்க் கட்சிகள் ஒரே அணியில் திரண்டு வரும் நிலையில் நேற்று இரவுதனது ஒரு வார ஓய்வை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ஜெயலலிதா.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

பாரதீய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய உறவு வைத்துள்ளதாக கூறப்படுவது வெறும் கற்பனையான செய்தி.சிலருடைய கற்பனையின் சிறு வெளிப்பாடுதான் இது.

குஜராத்தில் மோடி பதவியேற்பு விழாவுக்குச் சென்றது பெரிய விஷயமல்ல. நல்லெண்ண அடிப்படையில் மோடிஅழைத்தார். நான் கலந்து கொண்டேன். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றுகருதுகிறேன்.

இந்துத்வா குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கருத்துக் கொண்டுள்ளனர், அதை வெளிப்படுத்திவருகின்றனர். அதுபோலவே, பிரதமர் வாஜ்பாயும் தனது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.

தேசிய அளவில் நாங்கள் ஏற்கனவே முக்கியப் பங்கு வகித்து வருகிறோம். எனவே தனியாக தேசிய அரசியலில்இனிதான் நுழைய வேண்டும் என்பதில்லை.

அதிமுகவுக்கு எதிராக, யார், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் நான் பயப்படப் போவதில்லை. யாருக்கும் நான்பயப்படவும் மாட்டேன்.

13ம் தேதி டெல்லியில் நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். இதுதொடர்பாகபிரதமருக்கு 2 முறை கடிதம் எழுதியிருந்தேன் என்றார் ஜெயலலிதா.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவியுடன் பா.ஜ.க. கூட்டணியில் நுழைய ஜெயலலிதா முயல்வதாகவும்இதற்காக அவரைச் சந்தித்துப் பேசவே ஹைதராபாத் சென்றார் என்றும் செய்திகள் வரும் நிலையில் அதைஜெயலலிதா மறுத்துள்ளார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X