For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்பனா சாவ்லா விண்ணில் பறந்தார்

By Staff
Google Oneindia Tamil News

புளோரிடா:

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்ணுக்குப் புறப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கேப் கனாவரலில் உள்ல கென்னடி விண்வெளித் தளத்தில் இருந்து கல்பனாவையும்இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரரான ஏற்றிக் கொண்டு ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியா ராக்கெட் இந்திய நேரப்படி இன்றிரவு9.19 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரேலைச் சேர்ந்த இலான் ரமோன் என்ற விண்வெளி வீரரும் இதில் பறந்ததால் ராக்கெட் தளத்துக்கு மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டிருந்தது. இஸ்ரேலிய வீரர் விண்ணுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதனால் ராக்கெட்டைத் தாக்கஅல்கொய்தா முயற்சிக்கலாம் என்ற அச்சம் நிலவியதையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ராக்கெட் விண்ணில் பறக்க ஆரம்பித்தபோது அமெரிக்க போர் விமானங்கள் சிறிது தூரம் வரை அதற்குப் பாதுகாப்பு அளித்தன.இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேற்று வரை அமெரிக்கா ரகசியமாகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்பனாவுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணமாகும். ஏற்கனவே 1997ம் ஆண்டில் இவர் ஸ்பேஸ் ஷட்டிலில் இவர்பறந்துள்ளார். ஹரியாணவைச் சேர்ந்த கல்பனா தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் வீராங்கனையாவார்.

மொத்தம் 7 பேர் கொண்ட குழு விண்ணுக்குச் சென்றுள்ளது. கிட்டத்தட்ட 70 வகையான ஆய்வுகளை இக் குழு விண்ணில்மேற்கொள்ளும். இந்த ஆய்வுகளில் பெரும்பான்மையானவை விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்திற்குஉதவப் போகும் ஆய்வுகள் தான்.

விண்ணில் எறும்புகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்றும் ஆராயப்பட உள்ளது. அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் சார்பில்இந்த ஆராய்ச்சியை நடத்த நாஸா முன் வந்துள்ளது. இதற்காக எறும்புகள் இந்த ராக்கெட்டில் விண்ணுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

16 நாட்கள் இக் குழு விண்ணில் இருக்கும். வரும் பிப்ரவரி 1ம் தேதி இந்த ஷட்டில் ராக்கெட் புளோரிடாவில் தரையிறங்கும்.

இந்தியாவைச் சேர்ந்த சுனிதா லின் வில்லியம்ஸ் என்ற இன்னொரு பெண்ணையும் அமெரிக்க விண்வெளி மையமான நாஸாவிண்வெளி வீரங்கனையாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி தந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா 1982ல் ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணுக்குச் சென்றார். அதன் பின்னர்விண்ணைத் தொட்ட முதல் இந்தியப் பெண் கல்பனா தான்.

இதற்கிடையே இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கல்பனா படித்த பள்ளி, அவர் விண்ணுக்குச் சென்றதைக் கொண்டாடிமகிழ்ந்தது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X