For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பவானியில் அணை: பிரதமருக்கு தமிழக விவசாயிகள் அவசர கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரிபிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக விவசாய சங்கங்களின் பேரவை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவுக்குள் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே அம்மாநிலம் அணை கட்டுவதற்கானமுயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதைத் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இவ்விஷயத்தில்பிரதமர் தலையிட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வாஜ்பாய்க்கு விவசாய சங்கங்களின் பேரவைத் தலைவர் ராமலிங்கம் எழுதியுள்ள கடிதத்தில்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி என்னும் இடத்தில்தான் பவானி ஆறு உற்பத்தியாகிறது. இவ்வாறுஉற்பத்தியாகும் ஆறு கேரளாவில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே பாய்கிறது. பின்னர் மீண்டும்தமிழகத்திற்குள்ளேயே வந்து பாய்கிறது.

தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பவானி ஆற்றின் குறுக்கேகேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 150 மீட்டர் தூரத்திற்குக் கால்வாயைவெட்டியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டினால் தமிழகத்தில் உள்ள 2.16 லட்சம் ஏக்கர் நிலங்கள்நீரில்லாமல் பாதிக்கப்படும்.

மேலும் கேரள எல்லையில் உள்ள தமிழக நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடுமையான குடிநீர்ப் பஞ்சமும்ஏற்படும்.

எனவே கேரள அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த உத்தரவிடும் வகையில் இவ்விஷயத்தில்பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ராமலிங்கம்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X