கைதிகளுக்கு பீடி, சிகரெட் விற்கும் மதுரை சிறை போலீசார்
மதுரை:
கைதிகளுக்கு பீடி வாங்கிக் கொடுத்து அதில் கமிஷன் அடித்து வந்தசிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறைக் காவலில் இருக்கும்போலீசார் கைதிகளுக்கு பீடி, சிகரெட், சோப்பு வாங்கிக் கொடுத்து அதற்கு கமிஷனும் வாங்கி வருகின்றனர்.
இது ஆண்டாண்டுகாலமாக நடந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக நிலைமை மிக மோசமடைந்துவிட்டது.பெரும்பாலான போலீசார் இந்தத் தொழிலில் இறங்கியதையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் முனிவேலுவுக்குமதுரை கமிஷ்னரிடம் இருந்து டோஸ் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய முனிவேலு சிறைக் காவலர்களின் தலைமை வார்டன் நாகராஜைசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். நாகராஜனும் சிறைச்சாலைக்குள் இந்த கமிஷன் விற்பனை நடத்தியுள்ளார்.
கடையில் விற்பதை விட 2 மடங்கு அதிக விலைக்கு இவரும் பிற போலீசாரும் பீடி, சிகரெட்டை கைதிகளிடம்விற்று வந்தனர்.
-->