நெடுமாறன் வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கியது: உயிர் தப்பினார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இன்றுதிருச்செந்தூரிலிருந்து கடலூர் கொண்டு வரப்பட்டபோது அவர் சென்ற போலீஸ் வேன் விபத்துக்குள்ளானது.
அந்த வேன் இன்று அதிகாலை தொழுதூர் என்ற இடத்தில் படுவேகத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3போலீசார் பலத்த காயமடைந்தனர். ஆனால், நெடுமாறன் காயமின்றி தப்பிவிட்டார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டு, கடலூர்சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.சமீபத்தில் தான் இவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப் பத்திரிக்கையின் நகலைவழங்குவதற்காக அவர் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட இருந்தார்.
இந் நிலையில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் இன்னொரு வழக்குத் தொடர்பாக நெடுமாறன் நேற்றுஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கடலூர் சிறைக்கு அவரை போலீசார் கொண்டு வந்தபோது இந்த விபத்துஏற்பட்டது.
இதனால் இன்று அவர் சென்னை பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவது தாமதமடைந்துள்ளது.காலையே கடலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருந்த அவர் மாலையில் தான் அழைத்துவரப்படுகிறார்.
-->