For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று அண்ணா நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து திமுகதலைவர் கருணாநிதி, சபாநாயகர் காளிமுத்து, முன்னாள்-இன்னாள் அமைச்சர்கள் அவருடைய சமாதியில் அஞ்சலிசெலுத்தினர்.

அண்ணாவின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுகவைச் சேர்ந்தசபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் அண்ணாசமாதிக்குச் சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து கருணாநிதி தலைமையிலான திமுகவினர்அண்ணா சமாதிக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி, திமுக இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் முடிவில் அண்ணா சமாதியில் கருணாநிதி உள்ளிட்டவர்கள் மலர் தூவி அண்ணாவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அதன் தலைவரான ஆர்.எம். வீரப்பன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களும்அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X